×

காரமடை ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் திண்ணை பிரசாரம்

மேட்டுப்பாளையம், மார்ச் 26: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர் நேற்று காரமடை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோப்பனாரி, நீலாம்பதி, ஊக்கையன்னூர், மூனுகுட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
 அப்போது பழங்குடியின மக்களிடையே அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன்.

பழங்குடியினர் பலர் பட்டப் படிப்புகள் படித்து வேலை இன்றி தவித்து வருகிறார்கள். திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தால் படித்த பட்டதாரி பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.  முன்னதாக பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய இசை கருவிகளுடன் மேள, தாள இசையுடன் திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரத்தை வரவேற்று தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். வாக்கு சேகரிப்பின் போது திமுக காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், மாணவரணி துணை அமைப்பாளர் மேடூர் கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், தோலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா செந்தில், வெள்ளியங்காடு ஊராட்சி செயலாளர் பத்திர சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கராஜ்,  வட்டார விவசாய பிரிவு அர்ஜுன் கௌரவம், வட்டார துணை தலைவர் உதயகுமார் முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன், சந்திரன், பரமேஸ்வரன், சண்முகசுந்தரம், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Corramadu Union ,R. S. Sanmukusandaram ,Thidi Prasamaram ,
× RELATED மழையால் வனப்பகுதியில் வறட்சி நீங்கியது